நீலகிரி: நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நீலகிரி: நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
உதகையில் அதிமுகவின் சார்பில் அண்ணாவின் திருவுருவபடத்திற்கு மாலைகள் அணிவித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது. இதில் உதகை நகர செயலாளர் க.சண்முகம் தலைமையில் கழக இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, குன்னூர் நகர அதிமுக சார்பில் அதன் நகர செயலாளர் டி.சரவணகுமார் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் பி.ஜெயராம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எல்.மணி, நகர அவை தலைவர் நிர்மல் ஜெய்ன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உதகையில் அதிமுகவின் சார்பில் அண்ணாவின் திருவுருவபடத்திற்கு மாலைகள் அணிவித்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது. இதில் உதகை நகர செயலாளர் க.சண்முகம் தலைமையில் கழக இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, குன்னூர் நகர அதிமுக சார்பில் அதன் நகர செயலாளர் டி.சரவணகுமார் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் பி.ஜெயராம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எல்.மணி, நகர அவை தலைவர் நிர்மல் ஜெய்ன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.