கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் பெ.சுமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கெளலிபிரவுன் ரோடு வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் பெ.சுமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், ஸ்மார்ட் சிட்டி பணிகளான சாலை அமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள், மின்சார புதைவடம், கேபிள்கள், 24x7 குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், தொலைதொடர்பு கேபிள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், இருபுறமும் பாதசாரிகள் நடைபாதைகள், அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள், ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கும் பணிகள் ஆகிய பணிகளை பார்வையிட்டு, ஸ்மாட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ஏ.ஜே.செந்தில் அரசன், செயற்பொறியாளர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் சுகந்தி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சத்தியமூர்த்தி, குடிநீர் பிரிவு இளம்பொறியாளார்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும், ஸ்மார்ட் சிட்டி பணிகளான சாலை அமைக்கும் பணிகள், பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள், மின்சார புதைவடம், கேபிள்கள், 24x7 குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், தொலைதொடர்பு கேபிள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், இருபுறமும் பாதசாரிகள் நடைபாதைகள், அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள், ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கும் பணிகள் ஆகிய பணிகளை பார்வையிட்டு, ஸ்மாட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ஏ.ஜே.செந்தில் அரசன், செயற்பொறியாளர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் சுகந்தி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், சத்தியமூர்த்தி, குடிநீர் பிரிவு இளம்பொறியாளார்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.