திருப்பூரில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

திருப்பூர்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவன்கொத்தி வரை விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் அமைக்கப்பட உள்ளது.



இதற்கு, எதிர்ப்பு தெரிவித்தும் சாலையோரமாக எண்ணெய் குழாய்களை அமைக்க வலியுறுத்தியும், திருப்பூரில் விவசாயிகள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.இந்நிலையில், விவசாயிகளின் போராட்ட காலத்தை கருத்தில்கொண்டு, இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 



தொடர்ந்து, பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால், பாரத் பெட்ரோலிய நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தின் துவக்க இடமான கண்டியன் கோவில் அருகே இன்று முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஈரோடு சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் விவசாயிகள் இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, போராட்ட பகுதிகள் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...