திருப்பூரில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

திருப்பூர்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர்: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூரில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவன்கொத்தி வரை விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் அமைக்கப்பட உள்ளது.



இதற்கு, எதிர்ப்பு தெரிவித்தும் சாலையோரமாக எண்ணெய் குழாய்களை அமைக்க வலியுறுத்தியும், திருப்பூரில் விவசாயிகள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.இந்நிலையில், விவசாயிகளின் போராட்ட காலத்தை கருத்தில்கொண்டு, இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 



தொடர்ந்து, பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால், பாரத் பெட்ரோலிய நிறுவனம் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தின் துவக்க இடமான கண்டியன் கோவில் அருகே இன்று முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஈரோடு சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் விவசாயிகள் இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, போராட்ட பகுதிகள் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...