கோவை: கோவையில் கூலித் தொழிலாளியை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோவை: கோவையில் கூலித் தொழிலாளியை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் தனது சகோதரர் வேல் முருகன் என்பவரது வீட்டில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வருபவர் கண்ணன். இவரை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கடந்த 10ம் தேதி இரவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கண்ணனின் உறவினரான ராதாகிருஷ்ணன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணனை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கிய பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கண்ணனுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் கூறுகையில், 6 மாதங்களுக்கு முன்பு கோவனூர் என்ற பகுதியில் நடந்த கொலை ஒன்றை ஒப்புக்கொள்ள கூறி காவல்துறையினர் தன்னை தாக்கியதாக தெரிவித்தார்.
இதனிடையே, பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கையில், கோவனூர் பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க கண்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், காவல்நிலையத்திற்கு அழைத்து வரும்போதே அவரது கால்களில் அடிப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளியானது. அதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க கூறி மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் தனது சகோதரர் வேல் முருகன் என்பவரது வீட்டில் தங்கி வெல்டிங் வேலை பார்த்து வருபவர் கண்ணன். இவரை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கடந்த 10ம் தேதி இரவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கண்ணனின் உறவினரான ராதாகிருஷ்ணன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணனை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கிய பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கண்ணனுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் கூறுகையில், 6 மாதங்களுக்கு முன்பு கோவனூர் என்ற பகுதியில் நடந்த கொலை ஒன்றை ஒப்புக்கொள்ள கூறி காவல்துறையினர் தன்னை தாக்கியதாக தெரிவித்தார்.
இதனிடையே, பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கையில், கோவனூர் பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க கண்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், காவல்நிலையத்திற்கு அழைத்து வரும்போதே அவரது கால்களில் அடிப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளியானது. அதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க கூறி மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.