கோவை: காட்டுபன்றி, மரநாய் போன்ற வனவிலங்குகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க கோரி ஒற்றை காலில் நின்று விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: காட்டுபன்றி, மரநாய் போன்ற வனவிலங்குகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க கோரி ஒற்றை காலில் நின்று விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஆனைமலை தாலுக்காவிற்குட்பட்ட அங்கலகுறிச்சி, சேத்துமடை, ஆழியாறு, மஞ்சநாயக்கனூர், கம்மாளப்பட்டி, கோலபருத்தியூர், கோட்டூர், செம்மனாம்பதி, மாரப்பகவுண்டன்புதூர், காளிபுரம், அம்பாரம்பாளையம், கிழவன்புதூர் ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு பணப்பயிர்களான தக்காளி, காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
தென்னை விவசாயத்தில் தேங்காய் ஆரம்ப நிலையான குரும்பகளை மரநாய்களும், மரப்பூனைகளும் சேதப்படுத்துவதால் தென்னை விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். பணப்பயிர்களை விவசாயம் செய்யும் விவசாயிகள் மயில்களாலும், காட்டு பன்றி தாக்குதலூலும் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், காட்டுபன்றிகள் விவசாயிகளையும் தாக்குகின்றது. வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.