கோவை: கோவையில் 3 செண்ட் நிலத்தை மணல் ஆறுமுகச்சாமி என்ற நபர் ஏமாற்றி பெற்றதோடு, கொலை மிரட்டல்கள் விடுப்பதாக, தாய் மற்றும் மகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை: கோவையில் 3 செண்ட் நிலத்தை மணல் ஆறுமுகச்சாமி என்ற நபர் ஏமாற்றி பெற்றதோடு, கொலை மிரட்டல்கள் விடுப்பதாக, தாய் மற்றும் மகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை, நியூ சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த புனிதா என்பவர் தனது மகள் மகாலட்சுமி உடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு இன்று அளித்தார். அதில், கடந்த 2004 ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தங்களது பூர்விக சொத்தான 3 செண்ட் நிலத்தை, தனது மாமனார் தங்களுக்கு தெரியாமல் மணல் ஆறுமுகச்சாமிக்கு விற்பனை செய்து விட்டதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தங்களது தரப்பு வழக்கறிஞர் மணல் ஆறுமுகச்சாமிக்கு சாதகமாக செயல்பட்டு ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும், மணல் ஆறுமுகச்சாமியை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், மேல் முறையீடு செய்ய திட்டமிட்ட நிலையில், அவர் ரவுடிகள் மூலம் மிரட்டல் விடுத்தாகவும் கூறிய புனிதா, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து, மிரட்டல்கள் வருவதால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு மணல் ஆறுமுகச்சாமியே பொறுப்பு எனவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.
கோவை, நியூ சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த புனிதா என்பவர் தனது மகள் மகாலட்சுமி உடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு இன்று அளித்தார். அதில், கடந்த 2004 ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தங்களது பூர்விக சொத்தான 3 செண்ட் நிலத்தை, தனது மாமனார் தங்களுக்கு தெரியாமல் மணல் ஆறுமுகச்சாமிக்கு விற்பனை செய்து விட்டதாகவும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தங்களது தரப்பு வழக்கறிஞர் மணல் ஆறுமுகச்சாமிக்கு சாதகமாக செயல்பட்டு ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும், மணல் ஆறுமுகச்சாமியை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், மேல் முறையீடு செய்ய திட்டமிட்ட நிலையில், அவர் ரவுடிகள் மூலம் மிரட்டல் விடுத்தாகவும் கூறிய புனிதா, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து, மிரட்டல்கள் வருவதால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு மணல் ஆறுமுகச்சாமியே பொறுப்பு எனவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.