கோவை போத்தனூர் காவல் நிலைய தலைமை காவலருக்கு கொரோனா தொற்று

கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்த நிலையில், மாநில சுகாதார ஆணைய அறிக்கையின்படி தினமும் 400கும் மேற்பட்டோர் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்த நிலையில், மாநில சுகாதார ஆணைய அறிக்கையின்படி தினமும் 400கும் மேற்பட்டோர் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

கோவை மாவட்டத்தில், பல காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், பணிக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில், வெள்ளலூர் பகுதியில் உள்ள போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலருக்கு கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளார்.

பரிசோதனையின் அறிக்கையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை, தொடர்ந்து அவர் வெள்ளலூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். போத்தனூர் காவல் நிலையத்தில், இதுவரை 8ற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீப நாட்களில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு தொற்று குறைந்து வந்த நிலையில், போத்தனூர் காவல் நிலைய தலைமை காவலருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது, காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

காவலர்கள், பாதுகாப்புடன் பணிபுரியுமாறு, மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தி அவர்களுக்கு, முகாகவசம், கையுறை, கண்ணாடி,கபசுர குடிநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார். 

வரும் நாட்களில், தமிழகத்தில் கோவை உட்பட ஐந்து மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தலைமை செயலர் சண்முகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...