கொரோனா பணிகளுடன் டெங்கு தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுரை

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து டெங்கு தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு அதன் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து டெங்கு தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு அதன் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவையில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர், நவம்பர் காலகட்டத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெங்கு தடுப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்பட வில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென 10க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு பணிகளையும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வந்தனர். விரைவில் வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ள நிலையில் கொரோனாவுடன் சேர்த்து டெங்கு தடுப்பு பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள சுகாதாரத் துறையினருக்கு அதன் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ கோவை மாவட்டத்தில் கொரோனா பணிகளுடன் டெங்கு தடுப்பு பணிகளையும் தீவிரப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் காய்ச்சலுடன் வருபவர்களுக்கு கொரோனா மட்டுமின்றி டெங்கு பாதிப்பும் உள்ளதா என்பதை கண்டறியப்படும். மேலும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டு மாடிகளிலும், வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகள், குடிநீர் டிரம்கள் போன்றவற்றை அடிக்கடி சுத்தப்படுத்தி மூடி வைத்து பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...