கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது கலெக்டர் வேண்டுகோள்

கோவை: கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:

கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500-க்கும் கீழே உள்ளது. மாவட்டத்தில் சுமார் தினமும் சுமார் 8 ஆயிரத்து 500 பேர் வரை சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 6 ஆயிரம் பேர் கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள். இவ்வாறு பரிசோதனை அதிகரிப்பதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏதேனும் சிறு அறிகுறிகள் வந்தாலும் அருகிலுள்ள அரசு அல்லது இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு உடனே சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம். கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது. இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...