கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது கலெக்டர் வேண்டுகோள்

கோவை: கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:

கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500-க்கும் கீழே உள்ளது. மாவட்டத்தில் சுமார் தினமும் சுமார் 8 ஆயிரத்து 500 பேர் வரை சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 6 ஆயிரம் பேர் கோவை மாநகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள். இவ்வாறு பரிசோதனை அதிகரிப்பதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்தப்படுவதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏதேனும் சிறு அறிகுறிகள் வந்தாலும் அருகிலுள்ள அரசு அல்லது இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு உடனே சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொள்ளலாம். கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டக்கூடாது. இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...