கோவை: தமிழகத்தில் நாளை நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து கோவையில் தமுமுக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: தமிழகத்தில் நாளை நடைபெறும் நீட் தேர்வை கண்டித்து கோவையில் தமுமுக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக அரியலூர் மாணவி அனிதா, விக்னேஷ், திருச்சியை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, கோவை மாணவி சுபஸ்ரீ, திருப்பூர் ரித்திஸ்ரீ என மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்விற்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று மதுரை தல்லாகுளம் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளரின் மகள் ஜோதி ஸ்ரீ உருக்கமான கடிதம் எழுதி வைத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மாணவி கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடந்த காரணத்தால் பாடங்கள் புரியவில்லை எனவும் தோல்வி அடைந்து விடுவோம் என அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உமர் கூறுகையில், நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து அது நடைமுறை படுத்தப்படவில்லை.
தற்போது ஆளும் தமிழக அரசு நடத்த மாட்டோம் என கூறியும் மத்திய அரசின் கட்டாயம் காரணமாக நாளை நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது. நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் நாளை தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக அரியலூர் மாணவி அனிதா, விக்னேஷ், திருச்சியை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, கோவை மாணவி சுபஸ்ரீ, திருப்பூர் ரித்திஸ்ரீ என மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்விற்கு எதிராக தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று மதுரை தல்லாகுளம் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளரின் மகள் ஜோதி ஸ்ரீ உருக்கமான கடிதம் எழுதி வைத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த மாணவி கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்தார். கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்புகள் நடந்த காரணத்தால் பாடங்கள் புரியவில்லை எனவும் தோல்வி அடைந்து விடுவோம் என அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மனிதநேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் உமர் கூறுகையில், நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து அது நடைமுறை படுத்தப்படவில்லை.
தற்போது ஆளும் தமிழக அரசு நடத்த மாட்டோம் என கூறியும் மத்திய அரசின் கட்டாயம் காரணமாக நாளை நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது. நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் நாளை தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.