கோவை: மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது.
கோவை: மருத்துவ படிப்பிற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது.
எனவே, நீட் நுழைவுத் தேர்வவை தமிழகத்தில் ரத்து செய்யக் கோரி, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், மாணவர்களும், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம், ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கோவை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், தமிழகத்தில் பல்வேறு மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனவே, நீட் நுழைவுத் தேர்வவை தமிழகத்தில் ரத்து செய்யக் கோரி, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், மாணவர்களும், ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம், ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கோவை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், தமிழகத்தில் பல்வேறு மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.