திருப்பூர்: நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், இந்த வருடம் முதல் முறையாக திருப்பூரிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், இந்த வருடம் முதல் முறையாக திருப்பூரிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதன்முறையாக திருப்பூரிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 90 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 24 நபர்கள் ஒரு அறைக்கு தேர்வு எழுதுவார்கள். ஆனால், கொரோனா காலம் என்பதால் ஒரு அறைக்கு 12 நபர்கள் என மொத்தம் 1,080 பேர் இந்த மையத்தில் தேர்வு எழுத உள்ளனர்.

திருப்பூரில் இயங்கும் மற்ற பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வையாளராக வர உள்ளனர். ஒரு அறைக்கு 2 மேற்பார்வையளர்கள் என மொத்தம் 180 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து 5 மணிக்கு முடிவடையும் தேர்வில் ஈரோடு, கோவை, கரூர் என பல மாவட்டங்களில் இருந்து மாணாக்கர்கள் வர உள்ளனர்.
அதேபோல, நாளை வர உள்ள மாணாக்கர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு இயல்பாக இருப்பதை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் 30 நிமிடம் கழித்து மீண்டும் பரிசோதிக்கப்படும் என்றும் அப்பவும் அதேபோல, இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேர்வு எழுத தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மேற்பார்வையாளராக இருக்கும் நபர்களுக்கு முழுகவச உடை கொடுக்கப்படும். மேலும், மற்ற அனைத்து நபர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதன்முறையாக திருப்பூரிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 90 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 24 நபர்கள் ஒரு அறைக்கு தேர்வு எழுதுவார்கள். ஆனால், கொரோனா காலம் என்பதால் ஒரு அறைக்கு 12 நபர்கள் என மொத்தம் 1,080 பேர் இந்த மையத்தில் தேர்வு எழுத உள்ளனர்.
திருப்பூரில் இயங்கும் மற்ற பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வையாளராக வர உள்ளனர். ஒரு அறைக்கு 2 மேற்பார்வையளர்கள் என மொத்தம் 180 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து 5 மணிக்கு முடிவடையும் தேர்வில் ஈரோடு, கோவை, கரூர் என பல மாவட்டங்களில் இருந்து மாணாக்கர்கள் வர உள்ளனர்.
அதேபோல, நாளை வர உள்ள மாணாக்கர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு இயல்பாக இருப்பதை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் 30 நிமிடம் கழித்து மீண்டும் பரிசோதிக்கப்படும் என்றும் அப்பவும் அதேபோல, இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேர்வு எழுத தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மேற்பார்வையாளராக இருக்கும் நபர்களுக்கு முழுகவச உடை கொடுக்கப்படும். மேலும், மற்ற அனைத்து நபர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.