பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு, பொதுமக்கள் பாராட்டு.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு, பொதுமக்கள் பாராட்டு.

பொள்ளாச்சி, ஆரோக்கியநாதர் வீதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் ரோந்து சென்ற மேற்கு காவல் நிலைய போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரித்த போது, அவர் வைத்திருந்த பையில் வங்கி பாஸ்புக், ரூபாய் 10,000, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்துள்ளது.
மேலும், விசாரணையில் அவர் வெள்ளகோவில், மூத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி சாந்தி என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த பெண்ணின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாயுடன், தனி வாகனம் மூலம் உறவினர்களுடன் சொந்த ஊரான வெள்ளகோவிலுக்கு பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார், பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்த, மேற்கு காவல் நிலைய போலீசாரை, பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சி, ஆரோக்கியநாதர் வீதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் ரோந்து சென்ற மேற்கு காவல் நிலைய போலீசார், அந்தப் பெண்ணிடம் விசாரித்த போது, அவர் வைத்திருந்த பையில் வங்கி பாஸ்புக், ரூபாய் 10,000, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்துள்ளது.
மேலும், விசாரணையில் அவர் வெள்ளகோவில், மூத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மனைவி சாந்தி என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த பெண்ணின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாயுடன், தனி வாகனம் மூலம் உறவினர்களுடன் சொந்த ஊரான வெள்ளகோவிலுக்கு பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார், பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்த, மேற்கு காவல் நிலைய போலீசாரை, பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.