Exclusive: கோவையில் இருந்து வரும் 21ம் தேதி முதல் பெங்களூர், மைசூருக்கு பேருந்து சேவைகள் இயக்க அதிக வாய்ப்பு - கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
கோவை: கோவையிலிருந்து பெங்களூர், மைசூருக்கு வரும் 21ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது, என கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறபிக்கப்பட்டு, தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் கோவையில் இருந்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஊரடங்குக்கு முன் கோவை புதிய பேருந்து நிலையத்திலிருந்து, அனைத்து நாட்களிலும் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 12 பேருந்துகளும், மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே, தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. விரைவில் மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவைகள் அனுமதிக்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கோவையில் உள்ள கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் மூலம்செல்ல அனுமதிக்கப்படும் போது, கோவையில் இருந்து மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். வரும் 21ம் தேதி முதல் வெளி மாநில பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி, அனுமதிக்கப்பட்டால் முதல் கட்டமாக 50 சதவீத பேருந்துகள் கர்நாடக போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும். அறிவிப்பு வந்தவுடன் முன் பதவிற்கான வேலைகள் துவங்கப்படும்," என்றார்.
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறபிக்கப்பட்டு, தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் கோவையில் இருந்து பெங்களூர், மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஊரடங்குக்கு முன் கோவை புதிய பேருந்து நிலையத்திலிருந்து, அனைத்து நாட்களிலும் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 12 பேருந்துகளும், மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இதனிடையே, தற்போது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. விரைவில் மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவைகள் அனுமதிக்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கோவையில் உள்ள கர்நாடக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் மூலம்செல்ல அனுமதிக்கப்படும் போது, கோவையில் இருந்து மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். வரும் 21ம் தேதி முதல் வெளி மாநில பேருந்து சேவைகள் அனுமதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அப்படி, அனுமதிக்கப்பட்டால் முதல் கட்டமாக 50 சதவீத பேருந்துகள் கர்நாடக போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும். அறிவிப்பு வந்தவுடன் முன் பதவிற்கான வேலைகள் துவங்கப்படும்," என்றார்.