கோவை: கோவையில் கொரோனா நோய் பரவலை தடுக்க உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் தினந்தோறும் மூன்று முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: கோவையில் கொரோனா நோய் பரவலை தடுக்க உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் தினமும் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாநகராட்சியில் கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், பேக்கரி, சலூன் கடைகள், மருந்து கடைகள் உட்பட அனைத்து கடைகளும் தினந்தோறும் மூன்று முறை கிருமிநாசினி தெளித்து தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும், பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து தனியார் மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், கிளீனிக்குகள், ஸ்கேன் சென்டர் ஆகிய இடங்களிலும் தினசரி மூன்று முறை கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல, கொரோனா அறிகுறி உள்ள அனைத்து நோயாளிகளும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பரிசோதனை செய்யவும், ஆக்சிஜன் அளவு 95% குறைவான நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவும் மற்றும் அதுசம்மந்தமான விவரங்களை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கவும் மாநகராட்சியின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கொரோனா தொற்று தொடா்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடா்பு கொள்ளவும் 1077, 0422-2302323, 9750554321.
கோவை மாநகராட்சியில் கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், பேக்கரி, சலூன் கடைகள், மருந்து கடைகள் உட்பட அனைத்து கடைகளும் தினந்தோறும் மூன்று முறை கிருமிநாசினி தெளித்து தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும், பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து தனியார் மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள், கிளீனிக்குகள், ஸ்கேன் சென்டர் ஆகிய இடங்களிலும் தினசரி மூன்று முறை கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல, கொரோனா அறிகுறி உள்ள அனைத்து நோயாளிகளும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் பரிசோதனை செய்யவும், ஆக்சிஜன் அளவு 95% குறைவான நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவும் மற்றும் அதுசம்மந்தமான விவரங்களை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கவும் மாநகராட்சியின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கொரோனா தொற்று தொடா்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எண்களுக்கு தொடா்பு கொள்ளவும் 1077, 0422-2302323, 9750554321.