நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு கவனமுடன் இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு கவனமுடன் இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, பகுதியில் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. இதனால் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அதேபோல, குன்னூர் கோத்தகிரியில் உள்ள மலைப்பாதையிலும், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலும், சுற்றுலாத்தலங்களிலும், அவ்வப்போது ஏற்பட்டு வரும் அடர்த்தியான மேகமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடும் மேகமூட்டத்தால் வாகனங்கள் இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஓட்டுனர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, பகுதியில் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. இதனால் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அதேபோல, குன்னூர் கோத்தகிரியில் உள்ள மலைப்பாதையிலும், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலும், சுற்றுலாத்தலங்களிலும், அவ்வப்போது ஏற்பட்டு வரும் அடர்த்தியான மேகமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடும் மேகமூட்டத்தால் வாகனங்கள் இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஓட்டுனர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.