பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலக்கடலை சாகுபடிக்காக விவசாயிகள் காளை மாடுகளை கொண்டு உழவு ஓட்டும் பணி தீவிரம்.

பொள்ளாச்சி  சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலக்கடலை சாகுபடிக்காக விவசாயிகள் காளை மாடுகளை கொண்டு உழவு ஓட்டும் பணி தீவிரம்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலக்கடலை சாகுபடிக்காக விவசாயிகள் காளை மாடுகளை கொண்டு உழவு ஓட்டும் பணி தீவிரம்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக, நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம், பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம், ஆனைமலை, அங்கலக்குறிச்சி, நா.மு.சுங்கம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலக்கடலைகளை விவசாயிகள் அறுவடை செய்தனர். 



இதைதொடர்ந்து, கடந்த மூன்று தினங்களாக பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மீண்டும் நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட மானாவாரி சாகுபடி செய்வதற்காக காளை மாடுகளை கொண்டு நிலத்தில் உழவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.



இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பலர் நிலக்கடலை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். காட்டு பன்றிகள் தொல்லையாலும், மழை உரிய நேரத்தில் பெய்யாததாலும், கடந்தமுறை நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டு, நஷ்டம் ஏற்பட்டது. 

தற்போது, அறுவடை முடிந்து சில தினங்களாக ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில், மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், தற்போது உளவு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதைதொடர்ந்து, நடவு பணிகளும் நடக்க உள்ளது. இந்த முறை மழை பெய்து வருவதால் நிலக்கடலை உற்பத்தி அதிகரிக்கும் என நம்பிக்கையில் உள்ளோம், என்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...