கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள்‌ குறித்து சிறப்பு கண்காணிப்பு அலுவலர்‌ மற்றும்‌ தொழில்துறை அரசு முதன்மை செயலாளர்‌ நேரில்‌ ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம்‌ மற்றும்‌ கிழக்கு மண்டலங்களில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பணிகள்‌ குறித்து சிறப்பு கண்காணிப்பு அலுவலர்‌ மற்றும்‌ தொழில்துறை அரசு முதன்மை செயலாளர்‌ முருகானந்தம்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

<


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம்‌ மற்றும்‌ கிழக்கு மண்டலங்களில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பணிகள்‌ குறித்து சிறப்பு கண்காணிப்பு அலுவலர்‌ மற்றும்‌ தொழில்துறை அரசு முதன்மை செயலாளர்‌ முருகானந்தம்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ சித்தாபுதூர்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ கொரோனா தொற்று உள்ளவர்களை மற்றும்‌ சளி, காய்ச்சல்‌, இருமல்‌, மூச்சுவிட சிரமம்‌ இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு மையத்தை கண்காணிப்பு அலுவலர்‌ மற்றும்‌ தொழில்துறை அரசு முதன்மை செயலாளர்‌ முருகானந்தம்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை அளிக்கப்படும்‌ முறைகளையும்‌, அம்மையத்தில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள்‌ குறித்தும்‌ கேட்டறிந்தார்.



அதனை‌ தொடர்ந்து ரத்தினபுரியில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ தூய்மைப்‌ பணியாளர்களை கொண்டு தினமும்‌ கிருமி நாசினி தெளிக்கப்படுகிறதா எனவும்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருப்பவர்களுக்கு தேவையான காய்கனி, பால்‌ மற்றும்‌ மளிகை பொருட்கள்‌ கிடைப்பதற்கு தொடர்புடைய அலுவலா்கள்‌ ஏற்படுத்தி தருகின்றனாகளா எனவும்‌ கேட்டறிந்தார்.



பின்னர் கிழக்கு மண்டலத்தில்‌ குறைவான கொரோனா தொற்று உள்ளவர்களுக்காக சிகிச்சை அளிப்பதற்காக கொடீசியாவில்‌ அமைக்கப்பட்டுள்ள கோவிட்‌-19 கேர் சென்டரை பார்வையிட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்‌ மற்றும்‌ அரசு முதன்மை செயலாளர்‌ முருகானந்தம்‌ இ.ஆ,.ப., அவர்கள்‌ அம்மையத்தில்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்வசதி மற்றும்‌ சிகிச்சையளிக்கப்படும்‌ முறைகள்‌ குறித்தும்‌, பணியாளர்கள்‌ சுழற்சி முறையில்‌ பணியில்‌ ஈடுபடுகின்றனரா எனவும்‌, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வழங்கப்படும்‌ உணவுகள்‌ குறித்தும்‌ மருத்துவர்கள்‌ சுகாதார அலுவலர்களிடம்‌ கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, மண்டல உதவி ஆணையா்‌ மகேஷ்கனகராஜ்‌ (மத்தியம்‌), முருகன்‌ (கிழக்கு) நகர்நல அலுவலர்‌ ராஜா, துணை இயக்குநர் சுகாதார பணிகள்‌ ரமேஷ்குமார்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...