திருப்பூர் மாவட்டத்தில் குவியும் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான டீ-சர்ட்டுகளின் ஆர்டர்கள்..! பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான டீ-சர்ட்டுகளின் ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிரான டீ-சர்ட்டுகளின் ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீப காலமாக மத்திய அரசு பல்வேறு வகைகளில் இந்தியை திணிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரக்கூடிய சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீ-சர்ட் அணிந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான சில நிமிடங்களிலேயே அவை ட்விட்டர் டிரெண்டிங்கிலும் முதலிடத்தை பிடித்தது.

அதேபோல, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டீசர்ட் அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், இந்நிகழ்வு பெரும் விவாதத்திற்குள்ளானது.



இந்நிலையில், இந்த டீ-சர்ட்டுகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளதால், திருப்பூரில் அவற்றுக்கான ஆர்டர்களும் அதிகரித்துள்ளதாக பனியன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் முதலில் இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய வடிவத்தை அளித்ததை கொண்டு உற்பத்தி செய்ததாகவும் ஆனால், அவை இந்த அளவிற்கு ட்ரெண்டிங் ஆகும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த உற்பத்தியாளர்கள், தற்போது கட்சிகளைக் கடந்து இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் இந்த டீசர்ட்டுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக கூறினர்.

மேலும், தங்களுக்கு தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமல்லாது அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் தமிழ் பேசும் மக்களிடமிருந்து ஆர்டர்கள் வரத் துவங்கி இருப்பதாக தெரிவித்தனர்.



இந்த டீ-சர்ட்டுகள், இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தமிழர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதோடு, அவை தங்களிடம் இருந்து அயல் நாடுகள் வரை செல்வது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...