கோவை: கோவை கணபதி அருகே 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை கணபதி அருகே 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை தந்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கணபதியை அடுத்த மணியகாரம் பாளையம் பகுதியில் வசித்து வரும் 42 வயது கூலி தொழிலாளியின் மகளான 15 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது, குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை, தனது மகள் என்றும் பார்க்காமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி உறவினர்களின் உதவியுடன் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சொந்த மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதியை அடுத்த மணியகாரம் பாளையம் பகுதியில் வசித்து வரும் 42 வயது கூலி தொழிலாளியின் மகளான 15 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது, குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை, தனது மகள் என்றும் பார்க்காமல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி உறவினர்களின் உதவியுடன் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சொந்த மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.