நெடுஞ்சாலை சினிமா பட பாணியில் ஓடும் லாரியில் ஏறி ஜவுளி பண்டல்களை திருடிச் சென்ற கொள்ளையர்கள்..! போலீசார் விசாரணை

கோவை: ஈரோட்டிலிருந்து ஜவுளி பார்சல்களை ஏற்றி சென்ற லாரியில் ஜவுளி பண்டல்களை சினிமா பாணியில் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: ஈரோட்டிலிருந்து ஜவுளி பார்சல்களை ஏற்றி சென்ற லாரியில் ஜவுளி பண்டல்களை சினிமா பாணியில் திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கேரளாவுக்கு ஜவுளிகளை பார்சல் ஏற்றி கொண்டு வந்த TN-41 AU 8290 என்ற எண் கொண்ட லாரியை நாகர்கோவிலை சேர்ந்த லாரி ஓட்டுனர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட்டில் இருந்து கருமத்தம்பட்டி டோல்கேட் அருகே வந்தபோது, ஓட்டுனர் ரவிக்குமார் வாகனத்தை சோதைனை செய்த போது கயிறுகள் அவிழ்ந்து உள்ளதை கண்டவர் லாரியின் மேல் ஏறி பார்த்த போது 130 பண்டல்களுடன் ஏற்றி வரப்பட்ட லாரியில் தார்ப்பாயை கிழித்து உள்ளிருந்த 50,000 ரூபாய் மதிப்பிலான 4 துணி பண்டல்கள் கிழித்து எடுத்துச் செல்லப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



துணி பண்டல்களை திருடர்கள் சினிமா பட பாணியில் வாகனத்தில் பின்புறமாக வந்து, ஓடும் லாரியில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த லாரியில் உள்ள துணிகள் அனைத்தும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட இருந்தது.

இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற பொழுது முதலில் புகாரை ஏற்க மறுத்தவர்கள் அவினாசி காவல்நிலையத்தில் புகாரளிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதன் பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் புகார் பெறப்பட்டு புகார் மனு ரசீதும் ஓட்டுனருக்கு கருமத்தம்பட்டி காவலர்கள் வழங்கியுள்ளனர்.

ஓடும் லாரியில் சினிமா பாணியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது ஓட்டுனர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...