கோவை: மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது காட்டு பன்றி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுநர் உயிரிழப்பு.
கோவை: மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது காட்டு பன்றி மோதி விபத்து ஏற்பட்டதில் ஓட்டுநர் உயிரிழப்பு.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய வெல்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நாசர், வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று, இரவு தனது இருசக்கர வாகனத்தில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு மேட்டுப்பாளையம், பத்ரகாளியம்மன் சாலை, சமயபுரம் பகுதியில் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக காட்டுப்பன்றி ஒன்று சாலையை கடந்து உள்ளது. அதனால், தீடீரென வாகனத்தை நிறுத்த முடியாததால், இருசக்கர வாகனம் பன்றியின் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார், அங்கு, அப்துல் நாசரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தற்போது, அப்துல் நாசர் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல் கட்டமாக காட்டு பன்றியால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு நஷ்டஈடாக, அப்துல் நாசர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் சாலையில், வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், என வனத்துறை தொடர்ந்து அறிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய வெல்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நாசர், வெற்றிலை வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று, இரவு தனது இருசக்கர வாகனத்தில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு மேட்டுப்பாளையம், பத்ரகாளியம்மன் சாலை, சமயபுரம் பகுதியில் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக காட்டுப்பன்றி ஒன்று சாலையை கடந்து உள்ளது. அதனால், தீடீரென வாகனத்தை நிறுத்த முடியாததால், இருசக்கர வாகனம் பன்றியின் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார், அங்கு, அப்துல் நாசரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தற்போது, அப்துல் நாசர் உடல் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் முதல் கட்டமாக காட்டு பன்றியால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு நஷ்டஈடாக, அப்துல் நாசர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் சாலையில், வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், என வனத்துறை தொடர்ந்து அறிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.