அறிவிப்பு வரும்வரை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள செல்ல பேருந்துகள் இயக்கப்படாது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள செல்ல பேருந்துகள் இயக்கப்படாது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்.

கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து, கேரள செல்ல பேருந்துகள் இயக்கப்படாது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழகம் கோவை, சார்பாக கேரளா மாநிலம் கோழிக்கோடு, பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 30 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

தமிழகத்தில் நாளை முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து இயக்கப்படும், என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாது, என போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

"கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தற்போது துவங்கப்படவில்லை. எனவே, உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்ல பேருந்துகள் இயக்கப்படாது", என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...