கோவையில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் 9 பேர் மட்டுமே பயணம்..!

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத செல்பவர்களுக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில் நேற்று இரவு 9 மணிக்கு, கோவை-சென்னை இடையே இயக்கப்பட்டது. இதில், கோவையில் இருந்து 9 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர், என தகவல் தெரிவிக்கின்றது

கோவை,: கோவையிலிருந்து பயணிகள் சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத செல்பவர்களுக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில், நேற்று இரவு 9 மணிக்குகோவை-சென்னை இடையே இயக்கப்பட்டது. இதில், கோவையில் இருந்து 9 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர், என தகவல் தெரிவிக்கின்றது.

அந்த ஒன்பது பயணிகளுக்கும், கோவை ரயில் நிலையத்தில் கேமராவுடன் இணைக்கப்பட்ட, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

அதே போல், மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து கோவைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இரவு 9 மணிக்கு இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு 16 பெட்டிகள் கொண்டு அந்த ரயில் இயக்கப்பட்டது.

இது குறித்து, தென்னக ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவையில் இருந்து தேர்வு எழுத செல்வோர், அவர்களது பெற்றோர்கள் என 9 பேர் மட்டுமே பயணம் செய்தனர். அவர்களுக்கு உரிய காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், முககவசம் உள்ளிட்டவை அணிந்துள்ளனரா? எனவும் கண்காணிக்கப்பட்டனர்," என்றார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...