தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத செல்பவர்களுக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில் நேற்று இரவு 9 மணிக்கு, கோவை-சென்னை இடையே இயக்கப்பட்டது. இதில், கோவையில் இருந்து 9 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர், என தகவல் தெரிவிக்கின்றது
கோவை,: கோவையிலிருந்து பயணிகள் சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு எழுத செல்பவர்களுக்காக முன்பதிவில்லா சிறப்பு ரயில், நேற்று இரவு 9 மணிக்குகோவை-சென்னை இடையே இயக்கப்பட்டது. இதில், கோவையில் இருந்து 9 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர், என தகவல் தெரிவிக்கின்றது.
அந்த ஒன்பது பயணிகளுக்கும், கோவை ரயில் நிலையத்தில் கேமராவுடன் இணைக்கப்பட்ட, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
அதே போல், மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து கோவைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இரவு 9 மணிக்கு இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு 16 பெட்டிகள் கொண்டு அந்த ரயில் இயக்கப்பட்டது.
இது குறித்து, தென்னக ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவையில் இருந்து தேர்வு எழுத செல்வோர், அவர்களது பெற்றோர்கள் என 9 பேர் மட்டுமே பயணம் செய்தனர். அவர்களுக்கு உரிய காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், முககவசம் உள்ளிட்டவை அணிந்துள்ளனரா? எனவும் கண்காணிக்கப்பட்டனர்," என்றார்.
அந்த ஒன்பது பயணிகளுக்கும், கோவை ரயில் நிலையத்தில் கேமராவுடன் இணைக்கப்பட்ட, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
அதே போல், மறுமார்க்கமாக, சென்னையில் இருந்து கோவைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று இரவு 9 மணிக்கு இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து சென்னைக்கு 16 பெட்டிகள் கொண்டு அந்த ரயில் இயக்கப்பட்டது.
இது குறித்து, தென்னக ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவையில் இருந்து தேர்வு எழுத செல்வோர், அவர்களது பெற்றோர்கள் என 9 பேர் மட்டுமே பயணம் செய்தனர். அவர்களுக்கு உரிய காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், முககவசம் உள்ளிட்டவை அணிந்துள்ளனரா? எனவும் கண்காணிக்கப்பட்டனர்," என்றார்.