கோவையில் காவலர்களிடையே கொரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்டுள்ளது - மாநகர காவல் ஆணையர்!

கோவை: கோவையில் காவலர்களிடையே கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் காவலர்களிடையே கொரோனா பரவல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.



கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் பேசுகையில், கொரோனா தொற்று கண், மூக்கு, வாய் வழியாக எளிதில் பரவும் என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகர காவலில் பணிபுரியும் காவலர்களிடையே நோய் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்டு உள்ளது என்றார்.

கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் காவலர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் இது சக காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றவர், பாதுகாப்புக்காக கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, கபசுர குடிநீர் அருந்துவது, வெளியில் சென்று வரும்போது குளிப்பது உள்ளிட்டவைகளை பின்பற்றுவதோடு குடும்பத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.



அதேபோல, விடுமுறையில் சென்று பணிக்கு திரும்பும் காவலர்கள் பணியின் போது பாதுகாப்பாக இருப்பது போல விடுமுறையில் செல்லும் போதும் அதே கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.



இதனை தொடர்ந்து முககவசம், கையுறை, கிருமி நாசினி, கண்ணாடி உள்ளிட்ட பாதுகாப்பு அடங்கிய உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கினார். மேலும், மாநகர காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின், குற்றபிரிவு துணை ஆணையர் உமா, தலைமையிட துணை ஆணையர் குணசேகரன் மற்றும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...