திருப்பூர்: திருப்பூரில் கொரோனா ஊரடங்கு கால நிவாரண நிதியை பாதிக்கப்பட்டவருக்கு முறைப்படுத்தி வழங்க கோரி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் கொரோனா ஊரடங்கு கால நிவாரண நிதியை பாதிக்கப்பட்டவருக்கு முறைப்படுத்தி வழங்க கோரி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், ஆறு மாத காலத்திற்கு ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் அரிசி கடை வீதியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், ஆறு மாத காலத்திற்கு ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் அரிசி கடை வீதியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.