செப்.7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் வரவேற்பு

செப்.7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் வரவேற்பு

கோவை: தமிழகம் முழுவதும் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்துள்ள, முதலமைச்சரின் அறிவிப்பு, பொது மக்கள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகள் இயக்க அனுமதியளித்தை தொடர்ந்து, தற்போது செப்டம்பர் 7-ம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணிகள் ரெயில் சேவைக்கும், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கி தமிழக முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த அறிவிப்பு, பொது மக்கள் மற்றும் தொழில் துறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.கோவையிலிருந்து, திருப்பூர், நீலகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களுக்குவேலைக்கு செல்பவர்கள், பேருந்து மற்றும் ரயில் சேவை இல்லாததால், பெரும் அவதிக்குள்ளாகினர். 

பொது போக்குவரத்து அனுமதி இல்லாததால், வேலைக்கு ஆட்கள் வருவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், உற்பத்தி பெரும் அளவில் பாதிப்பு அடைந்து மேலும் நஷ்டம் அடைந்து வருவதாக தொழில் துறையினர் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், முதல்வரின் இந்த போக்குவரத்து தளர்வு குறித்த அறிவிப்பு மீண்டும் இயல்பு நிலையை உருவாக்க உறுதுணையாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...