கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில்‌ ஆய்வு!

கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ திவான்‌ பகதூர்‌ சாலையில்‌ ஸ்மாட்‌ சிட்டி திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.24.36 கோடி மதிப்பீட்டில்‌ சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல்‌ கெளலிபிரவுன்‌ ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.



இப்பணிகளில்‌ சாலை அமைக்கும்‌ பணி, பாதாள சாக்கடை குழாய்‌ அமைக்கும்‌ பணி, மின்சார புதைவடம்‌, கேபில்கள்‌, 24x7 குடிநீர் குழாய்‌ பதிக்கும்‌ பணி, தொலைதொடர்பு கேபில்‌ அமைத்தல்‌, மழைநீர் வடிகால்‌ அமைத்தல்‌, பாதசாரிகள்‌ நடைபாதை, அலங்கார தெருவிளக்குகள்‌ அமைக்கும்‌ பணி, ஒளிரும்‌ விளம்பர பலகைகள் அமைக்கும்‌ பணி ஆகிய பணிகள்‌ நடைபெற்று வருவதை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப. அவர்கள்‌ இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



இதனைத்‌ தொடர்ந்து, திவான்பகதூர்‌ சாலையில்‌ ரூ.41.33 கோடி மதிப்பீட்டில்‌ போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 373 கார்கள்‌ நிறுத்துவதற்காக கட்டப்பட்டு வரும் மல்டிலெவல்‌ கார்பார்க்கிங்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



முன்னதாக கோவை ஓப்பணகாரவீதி மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப் பள்ளியில்‌ சமூக இடைவெளியுடன்‌ மாணவிகள்‌ சோக்கை நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, செயற்பொறியாளர்கள்‌ ஸ்மாரா்ட்சிட்டி திட்டம்‌ சரவணகுமார்‌, வைதீஸ்வரன்‌ (மின்வாரியம்‌), உதவி செயற்பொறியாளர்‌ சுகந்தி, பால்ராஜ்‌(மின்வாரியம்‌) உதவி பொறியாளா்கள்‌ கமலக்கண்ணன்‌,

சத்தியமூர்த்தி, குடிநீர்‌ பிரிவு இளம் பொறியாளார்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...