கோவையில் ரூ.1,157 கோடி மதிப்பீட்டில் 48 மாதங்களுக்குள் அவிநாசி சாலை மேம்பால பணிகளை கட்டி முடிக்க உத்தரவு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவை அவிநாசி சாலை மேம்பால பணிகளை 48 மாதங்களுக்குள் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை அவிநாசி சாலை மேம்பால பணிகளை 48 மாதங்களுக்குள் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் நெரிசல் நிறைந்த சாலையாக விளங்கும் அவிநாசி சாலையில் தினமும் லட்சக்கணக்கான இருசக்கரம் மற்றும் இலகுரக, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது

இந்நிலையில், வாகனங்கள் விரைவாகச் செல்ல வசதியாக கோவை அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையத்தில் துவங்கி கோல்ட்வின்ஸ் வரை ரூ.1,157 கோடியில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்குவழி மேம்பாலம் கட்டப்படுகிறது.

அவிநாசி நோக்கி செல்லும் வழியில் இரு ஏறுதளம், அதேபோல் அவிநாசி பகுதியில் இருந்து கோவைக்கு வரும் வழித்தடத்தில், இரு ஏறு தளம் இரு இயங்கு தளங்கள் அமைக்கப்பட உள்ளன.

அதன்படி, கோவையிலிருந்து அவனாசி நோக்கிச் செல்லக்கூடியவர்கள் அண்ணா சிலை அருகே ஜிடி நாயுடு அருங்காட்சியகம் எதிரிலும், நவ இந்தியா அருகிலும் பாலத்தில் ஏறும் வகையில் ஏறு தளங்கள் மற்றும் ஹோப்காலேஜ் அருகிலும் சித்ராவுக்கு முன்னதாகவும் இறங்கும் வகையில் இறங்கும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பாலம் கோல்ட்வின்ஸ் பகுதியில் முடிவடைகிறது.

இதேபோல, அவனாசி பகுதியில் இருந்து வருவோர் கோல்ட்வின்ஸ் பகுதியில் பாலத்தில் ஏறவேண்டும். அரவிந்த் கண் மருத்துவமனை எதிர் பகுதியிலும் ஹோப் காலேஜ் பகுதியிலும் பாலத்தில் ஏறும் வகையில் ஏறுதளங்கள் அமைய உள்ளன. நவ இந்தியா சிக்னலுக்கு 100 மீட்டர் முன்னதாகவும் அண்ணா சிலை சந்திப்புக்கு முன்னதாக பழமுதிர் நிலையம் அருகிலும் அமைக்கப்படும் இறங்கு தளங்களில் இறங்கிக் கொள்ளலாம்.

இந்த நிலையில், கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் துவங்கி கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ. தூரத்திற்கு அமையவிருக்கும் நான்கு வழி மேம்பால கட்டுமான பணிகள் 48 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...