அன்னபூர்ணா உணவகத்தில் பணிபுரியும் ஒருவர் உட்பட லட்சுமி காம்ப்ளக்ஸில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று..!

கோவை: கோவை காந்திபுரம், கிராஸ் கட் ரோட்டில் உள்ள லட்சுமி காம்ப்ளெக்ஸ் என்ற வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு மற்றும் அதே வணிக வளாகத்தில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை காந்திபுரம், கிராஸ் கட் ரோட்டில் உள்ள லட்சுமி காம்ப்ளெக்ஸ் என்ற வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு மற்றும் அதே வணிக வளாகத்தில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதை தொடர்ந்து, அந்த வணிக வளாகம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

"காந்திபுரம் லட்சுமி காம்ப்ளெக்ஸ் என்ற வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கு, அதே காம்ப்ளக்ஸ்யில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவர், அந்த வணிக வளாகத்தில் உள்ள கடை ஊழியர் ஒருவர் என 3 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியபட்டு உள்ளது", என மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் கனகராஜ் தெரிவித்து உள்ளார்.

மேலும், அன்னபூர்ணா உணவகத்தில் பணிபுரியும் 45 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



அதேபோல, காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள செல்வ சிங் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டு, அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...