டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையில் கோவை மாநகராட்சி தீவிரம்!


கோவை மாவட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டப்பாளையம் சாலை, குமாரசாமி காலனியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொது கழிப்பிடக் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் புதனன்று நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து, 22 வது வார்டுக்குட்பட்ட சாய்பாபா காலனி பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதனைத்தொடர்ந்து, தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளையும், குப்பைத்தொட்டிகளை பராமறிப்பது குறித்தும் அவர் பார்வையிட்டார். 

இதையடுத்து கோவையில் சில காலமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்தார். இதில், ஆர்.எஸ்.புரம், கௌலிபிரவுன் சாலை, தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...