உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

கோவை: உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை: உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்து பிஏபி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள சோலையாறு, பரம்பிக்குளம் போன்ற அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், திருமூர்த்தி அணையில் 900 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், பி.ஏ.பி 2ம் மண்டலத்திற்கு செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனவே, அதற்கு முன்னதாக உப்பாறு அணைக்கு, அரசூர் வழியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும், அத்திக்கடவு -அவினாசி திட்டம் போன்று உப்பாறு அணைக்கு, அரசூர் சட்டரிலிருந்து இருந்து புதை குழாய் மூலம் நீரை எடுத்து வந்து உப்பாறு அணையை நிரப்பினால் உபரிநீர் வீணாகமல் தடுக்கப்படுவதோடு, விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும், எனவும், இதனை மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...