சென்னை: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை: பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலையில் கவலைக்கிடமானதால், அவருக்கு வெண்டிலேட்டர் சுவாசத்துடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றமும், மீண்டும் கவலைக்கிடமாகவும் என மாறி வருகிறது.
இதனிடையே, கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது சீரான முறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ, செயற்கை சுவாசம் ஆகியவற்றின் மூலம் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலையில் கவலைக்கிடமானதால், அவருக்கு வெண்டிலேட்டர் சுவாசத்துடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றமும், மீண்டும் கவலைக்கிடமாகவும் என மாறி வருகிறது.
இதனிடையே, கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது சீரான முறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ, செயற்கை சுவாசம் ஆகியவற்றின் மூலம் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.