கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று தபெதிக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று தபெதிக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு தினந்தோறும் சுமார் 6000 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலங்கள் தேவையா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நூறாண்டுகளுக்கு முன் இந்தியாவில் கொடூரமான பிளேக் நோய் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்த போது அந்த நோய்க்கு காரணமான எலிகளை கொள்ள வேண்டும் என்று அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டபோது எலி பிள்ளையார் வாகனம் அதை அழிக்கக்கூடாது என்று பால கங்காதர திலகர் போர்க்கொடி தூக்கினார்.
பிளேக் நோயால் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை எலிகளை கொள்ளக்கூடாது என்று மதத்தைக் காட்டி திலகர் கையாண்ட அதே நிலையைத்தான் இன்று பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி அமைப்புகள் கையாளுகின்றன.
கொரோனா நோயால் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தங்களின் மதவாத அரசியலுக்கு விநாயகர் ஊர்வலங்களை நடத்துவோம் என்று அறிவிக்கின்றனர்.
இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தமிழக அரசு பிறப்பித்த விநாயகர் ஊர்வலங்களுக்கு தடை, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என்ற உத்தரவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு தினந்தோறும் சுமார் 6000 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், விநாயகர் சிலை ஊர்வலங்கள் தேவையா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நூறாண்டுகளுக்கு முன் இந்தியாவில் கொடூரமான பிளேக் நோய் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்த போது அந்த நோய்க்கு காரணமான எலிகளை கொள்ள வேண்டும் என்று அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டபோது எலி பிள்ளையார் வாகனம் அதை அழிக்கக்கூடாது என்று பால கங்காதர திலகர் போர்க்கொடி தூக்கினார்.
பிளேக் நோயால் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை எலிகளை கொள்ளக்கூடாது என்று மதத்தைக் காட்டி திலகர் கையாண்ட அதே நிலையைத்தான் இன்று பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி அமைப்புகள் கையாளுகின்றன.
கொரோனா நோயால் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தங்களின் மதவாத அரசியலுக்கு விநாயகர் ஊர்வலங்களை நடத்துவோம் என்று அறிவிக்கின்றனர்.
இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தமிழக அரசு பிறப்பித்த விநாயகர் ஊர்வலங்களுக்கு தடை, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என்ற உத்தரவில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.