கோவையில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, சரவணம்பட்டி பகுதியில் வசித்து வரும் இளம்பெண் தனது கணவரை பிரிந்து இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவர், பணிக்கு செல்லும் காரணத்தால் தன் குழந்தையை பார்த்து கொள்ள ஒரு பெண்ணை, மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி குழந்தையை கவனித்து கொள்ளும் அந்த பெண் வெளியூர் சென்று விட்டதால், குழந்தையின் தாய்அன்றுகுழந்தையை பெண்ணின் வீட்டில் விட்டுவிட்டு, பணிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், பணி முடிந்து மாலை வீடு திரும்பிய தாய்,குழந்தையை வீட்டுக்கு அழைத்து செல்ல குழந்தையை அழைத்த போது, குழந்தையின் உடலில் சிறு சிறு காயங்கள் இருந்துள்ளதை பார்த்துள்ளார்.
மேலும், குழந்தையின் கண்கள் வீங்கி, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், உடனடியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய், இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரின் விசாரணையில், அவர் குழந்தையை பார்த்து கொள்ள விட்டுச்சென்ற வீட்டில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது மகள் வீட்டில் தான் இருந்தனர் என்பதையும், போலீசார் உறுதி செய்தனர். பின்பு, இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண்ணின் கணவரின், நண்பர் சக்திவேல் என்பவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
அவர்கள் வீட்டிற்கு, அடிக்கடி வந்து செல்லும் சக்திவேல்,
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து,சக்திவேலை கைது செய்த போலீசார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீப காலமாக குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருவதும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு சிறையில் அடைத்து வருவதும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை, சரவணம்பட்டி பகுதியில் வசித்து வரும் இளம்பெண் தனது கணவரை பிரிந்து இரண்டரை வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவர், பணிக்கு செல்லும் காரணத்தால் தன் குழந்தையை பார்த்து கொள்ள ஒரு பெண்ணை, மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி குழந்தையை கவனித்து கொள்ளும் அந்த பெண் வெளியூர் சென்று விட்டதால், குழந்தையின் தாய்அன்றுகுழந்தையை பெண்ணின் வீட்டில் விட்டுவிட்டு, பணிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், பணி முடிந்து மாலை வீடு திரும்பிய தாய்,குழந்தையை வீட்டுக்கு அழைத்து செல்ல குழந்தையை அழைத்த போது, குழந்தையின் உடலில் சிறு சிறு காயங்கள் இருந்துள்ளதை பார்த்துள்ளார்.
மேலும், குழந்தையின் கண்கள் வீங்கி, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், உடனடியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. அப்போது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய், இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரின் விசாரணையில், அவர் குழந்தையை பார்த்து கொள்ள விட்டுச்சென்ற வீட்டில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது மகள் வீட்டில் தான் இருந்தனர் என்பதையும், போலீசார் உறுதி செய்தனர். பின்பு, இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண்ணின் கணவரின், நண்பர் சக்திவேல் என்பவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
அவர்கள் வீட்டிற்கு, அடிக்கடி வந்து செல்லும் சக்திவேல்,
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து,சக்திவேலை கைது செய்த போலீசார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீப காலமாக குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீதான வன்கொடுமை அதிகரித்து வருவதும், இவ்வாறான செயல்களில் ஈடுபடுவார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு சிறையில் அடைத்து வருவதும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.