கோவை விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல்; கட்சியை சேர்ந்த இருவர் என ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு
கோவை: கோவையில் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர், ராமகிருஷ்ணன் என்பவரது காரை அடித்து உடைத்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை நரசிம்ம நாயக்கன்பாளையம், பாலாஜி நகர் பகுதியில் குடியிருப்பவர், இராமகிருஷ்ணன். இவர் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பில் கோவை மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு,அமைப்பின் சார்பாக, அவர் நோட்டீஸ் அடித்து விநியோகம்
செய்ததாக கூறப்படுகிறது. அதில்,
சில நிர்வாகிகளின் பெயர் விடுபட்டுள்ளதாக கூறி, அதே அமைப்பில் உள்ள இடிகரையை பகுதியை சேர்ந்த, குணசேகரன் என்பவர் செல்போனில் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், குணசேகரனின் தூண்டுதலின் பேரில் மோகன், சரவணன், செல்வம், செந்தில் உள்ளிட்ட நான்கு பேர் இராமகிருஷ்ணன் வீட்டிற்கு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, மதியம் 2:30 மணி அளவில் வந்து, ஏன்
சில நிர்வாகிகளின் பெயரை நோட்டீசில் போடவில்லை? என அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை தரைகுறைவாக பேசியதாக,
ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது காரை இரும்பு கம்பியால் தாக்கி கண்ணாடியை உடைத்துச் சென்றுள்ளனர்,என்றும் அவர் பெரிய நாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில், அவர் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு போலீீீீசார் விசாரனை மேற்கொண்டனர்.
மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டநபர்கள் மோகன், சரவணன், செல்வம், செந்தில் மற்றும் குணசேகரன் என்று அடையாளம் காணப்பட்டது. அதை தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அவர்கள் ஐவரும் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவர்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதில், குணசேகரன் மற்றும் மோகன் ஆகிய இருவரும் விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பை சேர்தவர்கள் என்றும் மற்றவர்கள் பற்றி விவரம் தெரியவில்லை, என்று சொல்லப்படுகிறது.
வழக்கில் சம்பந்தபட்ட நபர்கள், ராமகிருஷ்ணன் வீட்டில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின்
கண்ணாடியை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.