பொள்ளாச்சியில் 6 பேருக்கு கொரோனா தொற்று; கடை வீதியின் ஒரு பகுதி மூடல்

பொள்ளாச்சியில் இன்று 6 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: பொள்ளாச்சியில் இன்று 6 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கடை வீதியில் உள்ள புத்தகக்கடையில் பணியாற்றும் 36 வயது பெண்ணுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால், பொள்ளாச்சி கடைவீதியின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பகுதியில் 59 வயது முதியவருக்கும், குருமபாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 29 மற்றும் 25 வயது வடமாநில தொழிலாளர்கள் இருவருக்கும், வடக்கிபாளையத்தில் முதியவர் ஒருவருக்கும், கோட்டூரில் ஒருவருக்கும் என, இன்று பொள்ளாச்சியில் மொத்தம் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. 

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொள்ளாச்சி, சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

நோய் பாதிப்புக்குள்ளான அனைவரது குடியிருப்பு மற்றும் பணியாற்றும் இடங்களில் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...