கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்வதற்கு முக்கிய சாலையாக உள்ளது, வடக்கிபாளையம், நடுபுணி சாலை.
கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு செல்வதற்கு முக்கிய சாலையாக உள்ளது, வடக்கிபாளையம், நடுபுணி சாலை.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு காய்கறி, கோழி முட்டை, மீன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல இந்த சாலை முக்கிய பங்களிக்கிறது. கனரக வாகனங்கள் போக்குவரத்து அதிகமுள்ள, இந்த ரோட்டில் வடக்கிபாளையம் பிரிவு அருகே சுமார் 300 மீட்டர் நீளம் மற்றும் 100 அடி அகலம் கொண்ட ரயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இப்படியிருக்க, மேம்பாலம் கட்டி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இங்கு மின் விளக்குகள் அமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள், இரவு நேரங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், இந்த பாலம் மிகவும் வளைவாக உள்ளதால், இங்கு ரிப்லெக்டர் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டததால், இரவு நேரங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது.
எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வடக்கிபாளையம் பிரிவு மேம்பாலத்தில் மின் விளக்கு மற்றும் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் செய்ய தாமதமின்றி செய்து முடித்து, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.