கோவை: கோத்தகிரி அருகில் உள்ள பள்ளியாடா தேயிலை எஸ்டேட் பகுதியில் பாறைக்கு அடியில் சிக்கி கொண்ட கரடியை வனத்துறையினர் மீட்டனர்.
கோவை: கோத்தகிரி அருகில் உள்ள பள்ளியாடா தேயிலை எஸ்டேட் பகுதியில் பாறைக்கு அடியில் சிக்கி கொண்ட கரடியை வனத்துறையினர் மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள பள்ளியாடா பகுதியில் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை இப்பகுதியில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று அங்கிருந்த பாறையில் உணவைத் தேடிக் கொண்டிருக்கும் போது, அதனுடைய முன்னங்கால் பாறையின் இடுக்கில் மாட்டிக் கொண்டது. நீண்ட நேரம் முயற்சித்தும் அதனால் வெளியே வரமுடியவில்லை.

பின்னர் இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கரடியை காப்பாற்றினர். பிடிபட்ட கரடி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் கரடி என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள பள்ளியாடா பகுதியில் அண்மைக்காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை இப்பகுதியில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று அங்கிருந்த பாறையில் உணவைத் தேடிக் கொண்டிருக்கும் போது, அதனுடைய முன்னங்கால் பாறையின் இடுக்கில் மாட்டிக் கொண்டது. நீண்ட நேரம் முயற்சித்தும் அதனால் வெளியே வரமுடியவில்லை.
பின்னர் இது குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கரடியை காப்பாற்றினர். பிடிபட்ட கரடி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண் கரடி என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.