பொள்ளாச்சியில், அறுவடை நேரத்தில் மழை பெய்ததால் அழுகிய நிலக்கடலை பயிர்கள்; 50% விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை

கோவை: பொள்ளாச்சியில் தென்னை மற்றும் வாழைக்கு அடுத்தபடியாக மானாவாரி பயிரான நிலக்கடலை சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.








கோவை: பொள்ளாச்சியில் தென்னை மற்றும் வாழைக்கு அடுத்தபடியாக மானாவாரி பயிரான நிலக்கடலை சாகுபடியில், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 



பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள புரவிபாளையம், வடக்கிபாளையம், சேர்வைக்காரன்பாளையம், சூலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3000 ஏக்கர் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. 90 நாட்கள், பயிரான நிலக்கடலையை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டனர். 

அறுவடை காலத்தில் பெய்த கன மழையால், நிலக்கடலை பயிர்கள் அழுகும் அபாயம் - விவசாயிகள் வேதனை.

ஆனால், இந்த முறை உரிய நேரத்தில் பருவ மழை பெய்யாததாலும், காலம் தாழ்த்தி அறுவடை காலத்தில் பெய்த கன மழையால், நிலக்கடலை பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர். 



விலை சரிவு

சராசரியாக விளைச்சல் காலங்களில் ஒரு ஏக்கருக்கு ஒரு டன் நிலக்கடலை அறுவடை செய்யப்படும், மேலும் நிலக்கடலைக்கு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விலை கிடைத்து வந்தது, என்று நினைவு கூர்ந்தனர்.

சரியான விளைச்சல் இல்லாததால், தற்போது ஏக்கருக்கு 500 கிலோ வரை மட்டுமே நிலக்கடலை அறுவடை செய்து வருவதாக தெரிவித்தனர். 

மேலும், அறுவடை செய்யப்பட்ட கடலைகள் அளவில் சிறியதாக இருப்பதால், கிலோ ரூ. 20 முதல் ரூ.25 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது, என்றனர்.

ஒரு ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் கிடைத்த வருமானம், தற்போது மழை காரணமாக 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் உழவுப் பணி, அறுவடை, ஆட்கூலி, விதை என செலவுகளை கணகிட்டு பார்த்தால், பெரிதாக லாபம் ஏதுமில்லை, என நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...