ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு மூலம் ரூ.50 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தொழிலதிபர் உட்பட இருவர் கைது

கோவை: ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு ரூ.50 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவரை கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை: ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு மூலம் அரசுக்கு ரூ.50 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவரை கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக, கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

திருப்பூரை சேர்ந்த முஹம்மது சாஹில் என்பவர் போலியாக இன்வாய்ஸ், இ-வே பில் ஆகிய ஆவணங்கள் தயாரித்து, விற்பனை செய்ததாக போலி கணக்கு காட்டி, அதற்கு அரசு அளிக்கும் வரி சலுகை (input credit) பெற்றுள்ளார். இதற்கு, மூளையாக இருந்த திருப்பூரை சேர்ந்த ஜி.எஸ்.டி., கன்சல்டண்ட்டாக உள்ள கந்தசாமி என்பவர் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணையில், முஹம்மது சாஹில் தொழில் நஷ்டம் காரணமாக, கந்தசாமியை அணுகிய போது, மோசடியில் ஈடுபட உதவியதும், அதே போல், பல்வேறு நிறுவனங்களுக்கு இந்த மாதிரியான போலி பெயரில் இன்வாய்ஸ், இ-பில் தயாரித்து கொடுத்தது தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து, அதற்கு வருமான வரி இலக்கு பெறவும் திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற பட்டய கணக்காளர் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்ததும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து, போலி ஆவணங்கள், இன்வாய்ஸ், பல்வேறு நிறுவன லெட்டர்ஹெட்ஸ், மொபைல் சிம் கார்டு ஆகியவையை பறிமுதல் செய்த ஜி.எஸ்.டி., அதிகாரிகள், முஹம்மது சாஹில், கந்தசாமி ஆகிய இருவரையும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சலுகை தொகையான ரூ.10 கோடி ஜி.எஸ்.டி., கிரெடிட் உட்பட ரூ.50 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...