திருமண நிகழ்ச்சிகளை நடத்த தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும் - கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, ஊரடங்கு காலத்தில் திருமணம் செய்வோர் அரசின் விதிமுறைகளை பின்பற்றி, திருமண நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வழிபாட்டு தளங்கள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் திருமணம் செய்வோர் முன்கூட்டிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ‘‘திருமண நிகழ்ச்சிகளை வழிபாட்டு தளங்களில் அல்லது பிற இடங்களில் நடத்த விரும்புவோர், அவர்கள் பகுதியில் உள்ள தாசில்தாரிடமோ, இல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அணுகி முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே, அறிவித்தபடி திருமண நிகழ்ச்சிகளில் 50 க்கும் மேற்பட்டோர் பங்குபெற கூடாது. அப்படி, கலந்துகொள்ளும் அனைவரும் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’’, என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...