வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெறும் என்ற நம்பிக்கையில் பொள்ளாச்சி மண்பாண்ட தொழிலாளர்கள்

கோவை: கடந்த நான்கு மாத காலமாக, கொரோனா ஊரடங்கால், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விநாயகர் சிலை தயாரிப்பு குறைந்துள்ளதால், மேலும் வேதனை அடைந்து வருகின்றனர்.

கோவை: கடந்த நான்கு மாத காலமாக, கொரோனா ஊரடங்கால், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விநாயகர் சிலை தயாரிப்பு குறைந்துள்ளதால், மேலும் வேதனை அடைந்து வருகின்றனர். 

கொரோனா ஊரடங்கால் மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக்கும், மண் பானை, சட்டி, உள்ளிட்ட பலவகையான மண்பாண்டங்களை, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்ப முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருவிழா காலங்களில் தான் லாபம் ஈட்ட முடியும் என்ற நிலையில், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கம்போல் விமர்சியாக நடப்பது கேள்விக் குறியாகியுள்ளது. 



இதனால், பெரிய மண் சிலைகள் செய்வதை தவிர்த்து, வீட்டில் வைத்து கும்பிடும் சிறிய சிலைகளை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர், பொள்ளாச்சி மண்பாண்ட தொழிலாளர்கள்.

இந்த வருடம், விநாயகர் சிலை ஆர்டர்கள் பெரிய அளவில் ஏதும் வரவில்லை எனவும், அதனால் பெரிய சிலைகளை செய்வதை தவிர்த்து, வீடுகளில் வழிபாடு செய்யும் சிறு சிலைகளை செய்து வருவதாக, தெரிவித்தனர். 



மேலும், மக்கள் வீடுதோறும் சிறிய சிலைகளை வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் களிமண் சிலைகளை தயாரித்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தனர்.

சிலைகளின் வடிவம் மற்றும் அளவிற்கேற்ப 100 ரூபாய் முதல், 2000 ரூபாய் வரை சிலைகள் விற்பனைக்கு பொள்ளாச்சியில் தயாராகி வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு காரணமாக விசேஷங்கள், கோயில் திருவிழாக்கள், நடைபெறவில்லை என்பதால் தீச்சட்டி, முளைப்பாரி புரவிகள், குழந்தை பொம்மை, உள்ளிட்ட மண் பொம்மைகள் வியாபாரம் நடக்கவில்லை என்று வேதனை தெரிவித்த அவர்கள், விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் ஓரளவு வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, கூறுகின்றனர், மண்பாண்ட தொழிலாளர்கள்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...