கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் இன்று ஈடுபட்டனர்.
கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் இன்று ஈடுபட்டனர்.

இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வே டிஎஸ்பி அண்ணாதுரை சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை ரயில்வே உட்கோட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ரயில்வே காவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படை, மாநகர காவல் துறையினர் என மொத்தம் 475 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார். மேலும், ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்களில் முழு நேரமும் தணிக்கை பணியில், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர் என கூறினார்.

மேலும், தண்டவாளத்தில் நடந்து செல்பவர்கள், தண்டவாளத்தில் கல் வைப்பவர்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே மது அருந்துவது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம், எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.