வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளை காப்பீடு செய்ய அறிவுறுத்தும் தோட்டக்கலைத் துறையினர்; வரும் 31ம் தேதி வரை கால அவகாசம்

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 



கேரளா மாநில எல்லையில் பொள்ளாச்சி உள்ளதால் இங்கு, அதிகளவில் நேந்திரன் ரக வாழைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கதளி, பூவன், செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. மேலும், பல விவசாயிகள் தென்னைக்கு ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

கன மழை மற்றும் அதிக காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் வாழை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவது வழக்கம். எனவே, வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளை காப்பீடு செய்ய வைக்கும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.



தற்போது, பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களான ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஆத்து பொள்ளாச்சி, புரவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி துவங்கியுள்ளது. இவ்வாறு, வாழை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட பிரீமியம் கட்டணம் செலுத்தி, வரும் 31ம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

பயிர்க் கடன் பெற்றவர்கள் வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் அரசின் பொது சேவை மையங்களிலும், ஆன்லைன் வாயிலாகவும் பிரீமியம் தொகையை செலுத்த தோட்டக்கலை துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...