கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள புற்று கோவிலை ஒரு காட்டு யானை துதிக்கையால் தொட்டு வணங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த நிகழ்வு சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வலயதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள புற்று கோவிலை ஒரு காட்டு யானை துதிக்கையால் தொட்டு வணங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த நிகழ்வு சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வலயதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வனத்தில் உள்ள விலங்குகள் காட்டைவிட்டு வெளியேறி தேயிலை தோட்டங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது.
இந்த நிலையில், வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று தனியாருக்கு சொந்தமான வாட்டர் பால் எஸ்டேட் பகுதியில் நாக கன்னியம்மன் கோவிலில் உள்ள புற்று மற்றும் வேலில் தனது தும்பிக்கையால் தொட்டு மூன்று முறை வணங்குவது போன்று செய்துவிட்டு, மீண்டும் தேயிலைத் தோட்ட வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.

இதை அவ்வழியே சென்ற தொழிலாளர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த விடியோவை மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.