கோவை: மேட்டுப்பாளையம், ஓடந்துறை காப்புக்காடு பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையம், ஓடந்துறை காப்புக்காடு பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோவை மாவட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் அவர்களின் உத்தரவு படியும், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அவர்களின் அறிவுறுத்தலின் படி மேட்டுப் பாளையம் வனச்சரகத்தில் உள்ள யானைகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ட்ரோன் மூலம் வனத்திற்குள் இருக்கும் காட்டு யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் நடமாட்டம், ஆரோக்கிய நிலை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும், நோய்வாய்ப்பட்ட யானைகள் ஏதும் இருக்குமாயின் அவற்றை முன்கூட்டியே கண்காணிக்க இயலும் என்றார்.

மேலும், யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் நிலைகளை அறிந்து அதற்கு ஏற்ப அப்பகுதிகளுக்கு களப்பணியாளர்களை அனுப்பி, அந்த யானைகள் வனத்தில் இருந்து வெளியே வராமல் வனத்திற்குள்ளேயே திருப்பி அனுப்ப இயலுமா என்பதை கண்டறிய முடியும் என்று தெரிவித்தார்.
அதிகளவில் யானைகள் உயிரிழப்பு நடந்து வரும் சிறுமுகை பகுதியை ட்ரோன் மூலம் கவனிப்பது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
கோவை மாவட்ட கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் அவர்களின் உத்தரவு படியும், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அவர்களின் அறிவுறுத்தலின் படி மேட்டுப் பாளையம் வனச்சரகத்தில் உள்ள யானைகள் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ட்ரோன் மூலம் வனத்திற்குள் இருக்கும் காட்டு யானைகளின் எண்ணிக்கை, அவற்றின் நடமாட்டம், ஆரோக்கிய நிலை ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். மேலும், நோய்வாய்ப்பட்ட யானைகள் ஏதும் இருக்குமாயின் அவற்றை முன்கூட்டியே கண்காணிக்க இயலும் என்றார்.
மேலும், யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் நிலைகளை அறிந்து அதற்கு ஏற்ப அப்பகுதிகளுக்கு களப்பணியாளர்களை அனுப்பி, அந்த யானைகள் வனத்தில் இருந்து வெளியே வராமல் வனத்திற்குள்ளேயே திருப்பி அனுப்ப இயலுமா என்பதை கண்டறிய முடியும் என்று தெரிவித்தார்.
அதிகளவில் யானைகள் உயிரிழப்பு நடந்து வரும் சிறுமுகை பகுதியை ட்ரோன் மூலம் கவனிப்பது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.